Ticker

6/recent/ticker-posts

காங்கேசனுக்கு கன்னிப் பயணத்தை மேற்கொண்ட யாழ்தேவி


யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்திலிருந்து காங்கேசன்துறையை நோக்கி யாழ்தேவி இன்று பரீட்சார்த்த சேவையை ஆரம்பித்தது. 

   ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் பணிப்புரையின் பேரில் இந்த சேவை இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்தை ஊடறுத்து இந்தப் புகையிரதம் காங்கேசன்துறையைச் சென்றடைந்தது. 

இந்தப் பரீட்சார்த்த சேவையை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆரம்பித்து வைத்து காங்கேசன்துறைவரை புகையிரதத்தில் பயணத்தையும் மேற்கொண்டிருந்தார். 

எதிர்வரும் 2ம் திகதி ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவால் யாழ்தேவி புகையிரத சேவை காங்கேசன்துறைவரை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது. 

Post a Comment

0 Comments