Ticker

6/recent/ticker-posts

ஆப்­கா­னிஸ்­தானில் திரு­மண வீட்டில் விழுந்த ஏவு­கணை 20 பேர் பலி 40 பேர் காயம்

தென் மாகா­ண­மான ஹெல்மன்­தி­லுள்ள வீடொன்றில் இடம்­பெற்ற திரு­மண நிகழ்வில் மேற்­படி ஏவு­கணை தாக்­கி­யுள்­ளது. பலி­யா­ன­வர்கள் மற்றும் காய­ம­டைந்­த­வர்­களில் அநேகர் பெண்­களும் சிறு­வர்­களும் ஆவர்.

அந்த வீட்டின் உரி­மை­யாளர் கூறு­கையில், மண­ம­களை வர­வேற்க வீட்­டிற்கு வெளியே விருந்­தி­னர்கள் கூடி­யி­ருந்த வேளை குண்டு வெடித்­த­தா­கவும் அந்த சம்­ப­வத்தில் தனது சொந்த பிள்­ளைகள் ஒன்­பது பேர் காணா மல் போயுள்­ள­தா­கவும் தெரி­வித்தார். புதன்கிழமை ஆப்கான் படை­யி­ன­ருக்கும் தலிபான் போரா­ளி­க­ளுக்­கு­மி­டையே நடை­பெற்ற உக்­கிர மோதலின் போது இடம்­பெற்ற இந்த சம்­பவம் குறித்து சர்­வ­தேச ஊட­கங்கள் வியா­ழக்­கி­ழமை செய்­தி­களை வெளி­யிட்­டுள்­ளன.

அன்­றைய தினமானது ஆப்­கா­னிஸ்­தா­னி­லான அமெ­ரிக்க மற்றும் நேட்டோ படை­யி­னரின் படை நட­வ­டிக்­கைகள் முடி­வுக்கு கொண்டு வரப்­பட்ட தினம் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.
2001 ஆம் ஆண்டிற்கு பின் ஆப்கான் அதி­க­ளவு உயி­ரி­ழப்­புக்­களை சந்­தித்த ஆண்­டாக கடந்த ஆண்டு உள்­ளது.

அந்த ஆண்டில் அங்கு தலி­பான்­க­ளுக்கு எதி­ரான போராட்­டத்தில் குறைந்தது 4600 ஆப்கான் பாது­காப்பு படை­யினர் உயிரிழந் துள்ளனர். ஆப்கானிலான நேட்டோவின் படை நட வடிக்கை ஆரம்பமானது முதற்கொண்டு இதுவரை சுமார் 3500 வெளிநாட்டுப் படை யினர் பலியாகியுள்ளனர்.

Post a Comment

0 Comments