ஊவா மாகாண சபை அமைச்சர் செந்தில் தொண்டமானால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் தபால் ஊழியர் ஒருவர் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பதுளை - எல்ல தபால் நிலையத்தில் பணிபுரியும் பெரியசாமி ஞானசேகரன் என்ற தபால் ஊழியரே தாக்கப்பட்டு வைதத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் ஞானசேகரன் அத தெரண தமிழிணையத்திடம் தெரிவித்ததாவது,
எல்ல நியூபோர்ட் தோட்டத்தில் வாக்களார் அட்டை, தபால்களை விநியோகித்துவிட்டு திரும்பிக் கொண்டிருந்தேன். அப்போது கூட்டம் ஒன்றை நிறைவு செய்துவிட்டு வந்த அமைச்சர் செந்தில் தொண்டமான் என்னை அவருக்கு அருகில் அழைத்தார். நீ ஐயாவா என்று கேட்டார்.. நான் இல்லை சேர் என்றேன்.. திடீரென என்னை அவர் சரமாரியாகத் தாக்கினார். எதற்கு தாக்கினார் என்றே தெரியவில்லை. தாக்குதலில் எனது கையில் இருந்த வாக்காளர் அட்டை, தபால்கள், மற்றும் என்னுடைய பணம், நகை காணாமல் போயுள்ளது. எனக்கும் அவருக்கும் முன்விரோதம் இல்லை. கடந்த தேர்தலில் கூட வெற்றிலைக்குத் தான் வேலை செய்தேன். தாக்குதல் குறித்து எல்ல பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளேன்.´ என்று தெரிவித்தார்.
0 Comments