Ticker

6/recent/ticker-posts

இருக்க வீடின்றி, காணியின்றி பொதுமக்கள் அலைகின்றாா்களாம்! மன்னாாில் மஹிந்தவின் கண்டுபிடிப்பு

ருக்க வீடின்றி, காணியின்றி பொதுமக்கள் அலையயும் போது  பல ஏக்கர் காணிகளை ஒருசிலர் கைப்பற்றி, கோடீஸ்வரர் ஆகியிருக்கின்றனர். அவர்களிடம் மக்களாகிய நீங்கள் தான் கேள்வி கேட்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார் மஹிந்த ராஜபக்‌ஷ. மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில், உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 


இப்பகுதியிலுள்ள ஓர் அமைச்சர் அரசுடன் பத்து வருடங்களாக இருந்து விட்டு எம்மிடம் எல்லாவற்றையும் பெற்றுக் கொண்டு இப்பொழுது மறுபக்கம் மாறிவிட்டார். நாங்கள் ஓர் அமைச்சரை முழு நாட்டுக்கும் பொதுவான அமைச்சராகவே நியமிக்கிறோம். அவர் எந்த மதத்துக்கும் இனத்துக்கும் குலத்துக்கும் தனிப்பட்டவராக இருக்கமுடியாது. அரசாங்கத்தைச் சேர்ந்த அமைச்சராக இருந்தால் அவர் எல்லோரையும் ஒரே முகத்துடன் பார்க்க வேண்டும் இதுதான் அவருடைய கடமை. அவர் இனவாதத்தைத் தூண்டிவிட்டு, மதவாதத்தைத் தூண்டிவிட்டு சேவை செய்ய முடியாது. 

உங்களுக்குத் தெரியும் இப்பகுதி எவ்வித அபிவிருத்தியும் இல்லாமல் இருந்தாலும் இங்குள்ளவர்களில் சிலர் தங்களை அபிவிருத்தி செய்து கொண்டனர். இந்த பகுதி மக்களுக்கு காணி இல்லாது போனாலும் ஒரு சிலர் 400 அல்லது 500 ஏக்கர் காணிகளைப் பெற்றுக்கொண்டார்கள். எனவே நீங்கள்தான் இவ்வாறானவர்களைப் பார்த்துக் கேட்க வேண்டும். 

இந்த சந்தர்ப்பத்தில் நான் முஸ்லிம் மக்களைப் பார்த்து கேட்கின்றேன் உங்களுடைய பெறுமதியான வாக்குகளை எந்தவொரு முதலாளிக்கும் ஏலத்தில் விட்டுவிடாதீர்கள். எந்த இனத்தையும் இன்னொரு இனம் அடிமையாக்க முடியாது. இது எமது தாய் நாடு. நாம் எல்லோரும் ஒரு தாய் மக்கள். அந்த வகையிலே நாம் எல்லோரும் சேர்ந்து வாழவேண்டும் என்றார்

Post a Comment

0 Comments