சீனாவின் Xinjiang Uighur பகுதியில் உள்ள நிலப்பரப்பில் சுமார் 3 அடி அகலத்தில் மர்மமான முறையில் ஆழமான குழி ஒன்று உள்ளது. இதில் தொடர்ந்து நெருப்பை கக்கி வரும் தீ ஜுவாலைகளால், அப்பகுதி முழுவதும் வழக்கத்திற்கு மாறாக அதிக வெப்பமுடன் காணப்படுகிறது.
தீக்குழியிலிருந்து வெளிவரும் வெப்பம் சுமார் 792 டிகிரி செல்சியஸாக உள்ளதால், அதற்கு அருகில் வைக்கப்படும் பொருளை எளிதில் தீப்பிடிக்க வைக்கிறது. அதேபோல், வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதால், குழியின் ஆழத்தை கணக்கிட பூகோள விஞ்ஞானிகளால் அருகில் செல்ல முடியவில்லை. இந்த குழியை தினந்தோறும் அச்சத்துடன் கண்டு வரும் உள்ளூர்வாசிகள், இது ஏதோ நரகத்திற்கு செல்லும் வழியாக இருக்குமா என சந்தேகம் அடைந்துள்ளனர்.
அந்த பகுதியில் எரிமலைகள் இருந்ததற்கான சாத்திய கூறுகள் இல்லாததால், இந்த குழியை பற்றிய மர்மம் நீடித்தவாறே உள்ளது. இதுகுறித்து Fire Engineering Bureau துறையை சேர்ந்த Chen Long என்ற அதிகாரி கூறுகையில், சுமார் 1970ம் ஆண்டுகளில் இந்த பகுதி நிலக்கரியை வெட்டி எடுக்கும் சுரங்கமாக பயன்படுத்தப்பட்டது. ஆனால் நிலக்கரி தோண்டி எடுக்கும் பணி முடிவு பெற்றதும், அதிகாரிகள் இந்த பகுதியை முழுமையாக மூடாமல் விட்டுவிட்டதால், தற்போது பூமிக்கு அடியில் நிலக்கரி எரிந்து வருவதே இதற்கு காரணம் என தெரிவித்துள்ளார்.
எனினும் இந்த நெருப்புக்குழியை குறித்து உறுதியான தகவல்கள் வெளியாகாத நிலையில், மர்மமான குழியை நேரடியாக காண நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.
தீக்குழியிலிருந்து வெளிவரும் வெப்பம் சுமார் 792 டிகிரி செல்சியஸாக உள்ளதால், அதற்கு அருகில் வைக்கப்படும் பொருளை எளிதில் தீப்பிடிக்க வைக்கிறது. அதேபோல், வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதால், குழியின் ஆழத்தை கணக்கிட பூகோள விஞ்ஞானிகளால் அருகில் செல்ல முடியவில்லை. இந்த குழியை தினந்தோறும் அச்சத்துடன் கண்டு வரும் உள்ளூர்வாசிகள், இது ஏதோ நரகத்திற்கு செல்லும் வழியாக இருக்குமா என சந்தேகம் அடைந்துள்ளனர்.
அந்த பகுதியில் எரிமலைகள் இருந்ததற்கான சாத்திய கூறுகள் இல்லாததால், இந்த குழியை பற்றிய மர்மம் நீடித்தவாறே உள்ளது. இதுகுறித்து Fire Engineering Bureau துறையை சேர்ந்த Chen Long என்ற அதிகாரி கூறுகையில், சுமார் 1970ம் ஆண்டுகளில் இந்த பகுதி நிலக்கரியை வெட்டி எடுக்கும் சுரங்கமாக பயன்படுத்தப்பட்டது. ஆனால் நிலக்கரி தோண்டி எடுக்கும் பணி முடிவு பெற்றதும், அதிகாரிகள் இந்த பகுதியை முழுமையாக மூடாமல் விட்டுவிட்டதால், தற்போது பூமிக்கு அடியில் நிலக்கரி எரிந்து வருவதே இதற்கு காரணம் என தெரிவித்துள்ளார்.
எனினும் இந்த நெருப்புக்குழியை குறித்து உறுதியான தகவல்கள் வெளியாகாத நிலையில், மர்மமான குழியை நேரடியாக காண நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.
0 Comments