ஜப்பான் தலைநகர் டோக்கியோ மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. டோக்கியோவின் வடகிழக்கு பகுதியை மையமாக கொண்டு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோளில் 5.6 ஆக பதிவானது.
நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கியதால் அங்குள்ள மக்கள் பீதி அடைந்தனர். நிலநடுக்கத்தை தொடர்ந்து ரயில்களும் சில இடங்களில் நிறுத்தப்பட்டன. நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர்சேதம் பொருட்சேதம் குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை.

0 Comments