தேர்தல் சட்டங்களை மீறும் வேட்பாளர்களுக்கு மதிய உணவு காவல் நிலையத்திலும் இரவு உணவு விளக்கமறியலிலும் வழங்கப்படும் என தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
நேற்று இரவு இடம்பெற்ற தொலைகாட்சி நிகழ்சி ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் என்பது நாட்டில் அனைவரும் இணைந்து ஒன்றாக கொண்டாட வேண்டிய தேசிய விழா என அவர் கூறினார். எனினும் தேர்தல் சட்டத்தை மீறினால் சட்டம் செயற்படுத்தும் போது எவ்வித மாற்றங்களும் காணப்படாதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பிரதான அரசியல் கட்சிகள் இரண்டின் செயலாளர்கள் மாற்றப்பட்டமை
தொடர்பில் தேர்தல்கள் ஆணையாளரிடம் வினவப்பட்டது, அதற்கு தனது தீர்மானத்தை பொருத்தமான சந்தர்ப்பத்தில் அறிவிப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அமைதியான சூழ்நிலையே காணப்படுகின்றன - தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்கள்
இம்முறை பொதுத் தேர்தலுக்கான பிரச்சார நடவடிக்கைகள் நிறைவடைந்த பின்னரான காலப்பகுதியினுள் அமைதியான சூழ்நிலையே காணப்படுவதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்கள் தெரிவித்துள்ளது.
தேர்தல் சட்டங்களை பாதுகாப்பதற்காக அனைத்து பிரிவுகளும் முனைப்பாக செயற்படுகின்றதென கபே அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் கீர்த்தி தென்னகோன் தெரிவித்துள்ளார்.
அமைதியான காலப்பகுதியினுள் தேர்தலுக்கு அமைவான சம்பவங்களின் பதிவுகள் குறைவாகவே காணப்படுவதாக அவர் பெபரல் அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
இதுவரையில் வெளிநாட்டு கண்கானிப்பு குழு தங்கள் கண்கானிப்பு நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பொதுநலவாய கண்கானிப்பாளர்கள் தேர்தல் ஆணையாளரின் அழைப்பில் இம்முறை பொதுத் தேர்தலில் கண்கானிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளனர்.

0 Comments