மியன்மார் நாட்டின் மிகப்பெரிய நகராகிய யங்கூன் மற்றும் மேல் மாகாணமான சின்-இல் இரண்டு கொரோனா நோயாளர்கள் அடையாளங்காணப்பட்டுள்ளனர்.
சமீபத்தில் இங்கிலாந்து நாட்டிற்கு சென்று திரும்பி வந்த 26 மற்றும் 36 வயதுடைய இருவரே கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக மியன்மார் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
சீனாவுடன் நீண்ட எல்லையைக் கொண்ட மியன்மாரில் இதுவரை கொரோனா தொற்றுடைய நோயாளிகள் எவரும் அடையாளங்காணப்பட்டிருக்கவில்லை.
0 Comments