Ticker

6/recent/ticker-posts

ஜனாதிபதி தீங்கு இழைக்க அனுமதிக்காதவர் என்பதை முஸ்லிம் சமூகம் புரிந்து கொள்ள வேண்டும். _வேட்பாளர் ஏ.எல்.எம். பாரிஸ்


.காதிர் கான் )

ஜனாதிபதி மற்றும் பிரதமரை விமர்சிப்பதையும்தனிப்பட்ட ரீதியில் அரசாங்கத் தரப்பினரை விமர்சிப்பதையுமே முஸ்லிம் கட்சியின் தலைவர்கள் பலரும் இன்று செய்து வருகின்றனர்இவ்வாறு அவர்கள் குதர்க்கமாகப் பேசிவருவது கவலை தருவதாககண்டி மாவட்ட ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன வேட்பாளர் .எல்.எம்பாரிஸ் குற்றம் சுமத்தியுள்ளார்.

உடுநுவர தொகுதியில் வேகிரிய கிழக்குகெஹெல்வத்தபுவெலிகடகெட்டக்கும்புறகுருந்துவத்தநியு எல்பிட்டியமுருத்தகஹமுலகல்கமுவ ஆகிய பிரதேசங்களில் நேற்று முன்தினம் இடம்பெற்ற தேர்தல் பிரசார நிகழ்வுகளில் கலந்துகொண்டு உரை நிகழ்த்தும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

ஜனாதிபதியோ பிரதமரோ அல்லது அரசாங்கமோ ஒருபோதும் சிறுபான்மைச்  சமூக மக்களுக்கு எதிராக செயற்படப் போவதில்லைஆனால்முஸ்லிம் கட்சிகளின் தலைவர்கள் எனக் கூறிக்கொள்வோர்முஸ்லிம் மக்களை அச்சம் காட்டி வைத்திருக்கின்றார்கள்ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்க்ஷவை பயங்கரமான ஒருவராகச் சித்தரித்துக் காட்டியுள்ளார்கள்இவ்வாறு பொறுப்பற்ற முறையில் முஸ்லிம் தலைவர்கள் சிலரினால் மேற்கொள்ளப்படும் தவறான பிரசாரங்களினால்முஸ்லிம் சமூகம் ஏமாந்து விடக்கூடாது.

ஜனாதிபதித் தேர்தலில் தங்களுக்கு எதிராக வாக்களித்த மக்களை அடக்கி ஆள வேண்டும் எனும் இறுமாப்போடுஇந்தத் தேர்தலை அரசாங்கம் நடாத்த முனைவதாக அண்மையில் முஸ்லிம் தலைவர் ஒருவர் குற்றம் சுமத்தி இருந்தார்இவ்வாறான செயற்பாடுகளை அவர்கள் இதன் பிறகிலிருந்தாவது விட்டு விடவேண்டும்எதிர்காலத்தில் தங்களது சமூகத்திற்கு தாங்கள் என்ன செய்யப் போகின்றோம்எந்த விதமான நன்மைகளைப் பெறும் திட்டங்களை அமுல்படுத்தப் போகின்றோம்அரசாங்கத்துடன் பேசி சமூகத்திற்காக என்னென்ன செயற்பாடுகளை முன்னெடுக்கலாம்எனும் விடயங்களை விட்டு விட்டுஇவ்வாறான செயல்களில் அவர்கள் இறங்கியிருப்பது கவலையை ஏற்படுத்துகிறது.

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்க்ஷ முஸ்லிம்களுக்குத் தீங்கு இழைக்க ஒருபோதும் அனுமதிக்காதவர்இந்த விடயத்தை குறிப்பாக, முஸ்லிம் சமூகம் புரிந்து கொள்ள வேண்டும்முஸ்லிம் சமூகத்தின் முக்கியஸ்தர்கள் எனக் கூறிக்கொள்பவர்கள்ஜனாதிபதிக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் உள்ள நெருக்கத்தைத் தூரமாக்கி உள்ளமை தொடர்பாகஇன்று முஸ்லிம் சமூகம் சிந்திக்க ஆரம்பித்துள்ளது என்றார்.

Post a Comment

0 Comments