Ticker

6/recent/ticker-posts

தாய் ஓட்டிய முச்சக்கர வண்டி விபத்தில், தாயுடன் இரண்டு பிள்ளைகள் பலி!


வேயங்கொட - குடல்ஒலுவ பகுதியில் இடம்பெற்ற முச்சக்கரவண்டி விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளனர்.


முச்சக்கரவண்டி ஒன்று பாதையை விட்டு விலகி,  வாய்கால் ஒன்றில் கவிழ்ந்ததில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

விபத்தில் ஒன்றரை வயது மற்றும் 9 வயது பிள்ளைகள் இருவரும் அவர்களுடைய தாயும் உயிரிழந்துள்ளனர்.

விபத்து இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் குறித்த தாயே முச்சக்கரவண்டியை ஓட்டிச் சென்றுள்ளதாகவும் அவருக்கு நித்திரை ஏற்பட்டதன் காரணமாக  விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் அறியவருகிறது.

உயிரிழந்த தாயினதும் பிள்ளைகள் இருவரினதும் சடலங்கள் வத்துபிட்டிவல வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.

Post a Comment

0 Comments