அரச புலனாய்வு பிரிவுகளின் தகவல்களின் படி, புலஸ்தினி ராஜேந்திரன் என்ற சாரா என அடையாளம் காணப்பட்ட பெண், குண்டு வெடிப்பு இடம்பெறுவதற்கு முன்பு, சாய்ந்தமருதை விட்டு வெளியேறியுள்ளதாக அறிய வருகிறது.
குண்டுவெடிப்பு இடம்பெற்ற இடத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட டி.என்.ஏ மாதிரிகளோடு அந்தப் பெண்ணின் பெற்றோரின் டி.என்.ஏ உடன் ஒத்துப்போகவில்லை என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
இதன்போது சாய்ந்தமருதில் தற்கொலை குண்டுவெடிப்பு நடந்த வீட்டில் 17 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது டி.என்.ஏ சோதனைகளில் தெரிய வந்துள்ள போதிலும்;, இதில் சாரா புலஸ்தினி ராஜேந்திரன் உயிரிழக்கவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த செப்டம்பரில் படகு ஒன்றில் இந்தியாவுக்கு தப்பிச் செல்வதற்கு முன்னர் சந்தேகநபர் களுவாஞ்சிகுடியில் பதுங்கி இருந்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதற்கிடையில், கடந்த செப்டம்பர் மாதம் களுவஞ்சிகுடியிலிருந்து இந்தியாவுக்கு தப்பிச் செல்ல சாராவுக்கு உதவியதாக ஜூலை 13ம் திகதி சாராவின் உறவினர்; ஒருவரை கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினனர் கைது செய்துள்ளனர். அதுமட்டுமல்லாமல், இது தொடர்பான சாட்சிகளை மறைத்ததாக அம்பாறை வாகன போக்கு வரத்து பிரிவின் பொலிஸ் அதிகாரியான அபூபக்கர் என்பவர் கடந்த 13ம் திகதி கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
இந்தியாவுக்கு தப்பிச் செல்ல சாராவுக்கு உதவியதாக களுவாஞ்சிக்குடியில் கைது செய்யப்பட்டவர் செல்வகுமார் தேவகுமார் என அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், சந்தேகநபரை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. சாரா புலஸ்தினி ராஜேந்திரன் தீவிரவாத அமைப்பான தேசிய தவ்ஹீத் ஜமாஅத்தில் பணியாற்றும் போது, ஒரு பிரபலமான வெளிநாட்டு உளவு நிறுவனத்திற்கான உளவாளியாக பணியாற்றியதாக பாதுகாப்புப் படையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
சாரா புலஸ்தினி ராஜேந்திரன பிறப்பால் ஒரு தமிழர் என்றாலும், பின்னர் அவர் இஸ்லாமிய மதத்தைத் தழுவினார் எனவும், இவரின் மதம் மாற்றத்தை எதிர்த்து மாளிகாவத்தை பொலிஸ் நிலையத்தில் சாரா புலஸ்தினி ராஜேந்திரனின் தாயார் முறைப்பாடு செய்தும் இருந்தார் . இந்த சாரா புலஸ்தினி ராஜேந்திரன கட்டுவாப்பிட்டிய தேவாலயத்தில் தற்கொலை தாக்குதல் நடத்திய ஹஸ்தூனின் மனைவி என்றும் கூறப்படுகிறது.
உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல் சூத்திரதாரி சஹரன் ஹ~Pமின் குடும்பத்துடன் தொடர்புடைய பல பயங்கரவாதிகள சாய்ந்தமருத்தில் உள்ள ஒரு வீட்டில் பதுங்கியிருந்தபோது தற்கொலை குண்டைவெடிக்க செய்து உயிரிழந்தனரி, கடந்த ஆண்டு ஏப்ரல் 26ம் திகதி இரவு நடந்த இந்த சம்பவத்தில் சாராவும் இறந்துவிட்டார் என்று ஆரம்பத்தில் நம்பப்பட்டது.
பயங்கரவாத தாக்குதலைத் தொடங்குவதற்கு முன்னதாக சஹரனின் குழுவினர் குருநாகலில் உள்ள ஒரு துணிக் கடைக்கு சென்றபோது சாராவும் வெள்ளை ஆடைகளை வாங்கியிருந்தார் என்பதும் வெளிச்சத்திற்கு வந்தது.இதுதொடர்பாக வெளியிடப்பட்ட காணொளியில் சாராவையும் இருப்பதாக ; என்று பாதுகாப்புப் தரப்பினர் தெரிவித்தனர்.

0 Comments