Ticker

6/recent/ticker-posts

வெல்லம்பிட்டி மைத்திரி மேடை துப்பாக்கிச்சூடு: இரண்டு பொலிஸார் பணிநீக்கம்!

வெல்லம்பிட்டி - உமஹிலிய விளையாட்டு மைதானத்தில் நேற்று இரவு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

வெல்லம்பிட்டிய - உமஹிலிய விளையாட்டு மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் பிரச்சார மேடை நேற்று நள்ளிரவு இனந்தெரியாத நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தி சேதப்படுத்தப்பட்டது.

வேன் ஒன்றில் சென்ற குழுவினர் மேடையை நோக்கியும் வானத்தை நோக்கியும் துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ள நிலையில், துப்பாக்கிச்சூடு நடந்தபோது அங்கு பாதுகாப்பு கடடையில் பொலிஸார் இருந்துள்ளமை உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில் கடமையில் இருந்த பொலிஸார் குறித்து ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் இன்று காலை அறிவித்திருந்த நிலையில், தற்போது பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரும் சார்ஜன் ஒருவரும் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பில் இன்று (24) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண இந்த தகவலை வெளியிட்டார்.

Post a Comment

0 Comments