சுமார் 1.5 கிலோகிராம் தங்கத்தை வைத்திருந்ததாகக் கூறப்படும் இலங்கையைச்
சேர்ந்த பெண்ணொருவரை இந்தியாவின் நெடும்பாசறி விமான நிலையத்தில் நேற்று
திங்கட்கிழமை சுங்கத்திணைக்களத்தின் விமான புலனாய்வுப் பிரிவினர்
கைதுசெய்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இலங்கை ஏயார்லைன்ஸ் விமானத்தில் சென்ற 78 வயதான இவர், தங்கத்தை தனது
சேலையினுள் மறைத்துவைத்திருந்துள்ளார்.
தங்கச்சங்கிலிகள், மோதிரங்கள்
உள்ளிட்டவற்றை இவர் மறைத்துவைத்திருந்துள்ளார்.

0 Comments