Ticker

6/recent/ticker-posts

மைத்திரி ஆட்சியில் பிரதமராக சந்­தி­ரிகா முயற்சி – உதய கம்­மன்­பில

மைத்­தி­ரி­பால சிறி­சேன ஜனா­தி­ப­தி­யாக வந்தால் சந்­தி­ரிகா குமா­ர­துங்க பிர­தமர் பத­வியை பெறு­வ­தற்கும் முயற்­சிகள் இடம்­பெ­று­வ­தாக மேல் மாகாண முன்னாள் அமைச்சர் மற்றும் தூய ஜாதிக ஹெல உறு­ம­ய­வி­ன் தலைவருமான உதய கம்­மன்­பில தெரி­வித்தார்.
கொழும்பில் நேற்று நடை­பெற்ற செய்­தி­யாளர் மாநாட்டில் அவர் மேற்­கண்­ட­வாறு
குறிப்­பிட்டார்.
அவர் அங்கு மேலும் குறிப்­பி­டு­கையில்;
மைத்­தி­ரி­பால சிறி­சேன ஜனா­தி­பதி பத­வியை வகிக்­கவே முயற்­சிக்­கின்றார். மேலும் ஒற்­றை­யாட்சி முறைமை நீக்­கப்­ப­டுமா? இல்­லையா என்­ப­தற்கும் மைத்­தி­ரி­பால பதி­ல­ளிக்­க­வேண்டும்.
சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்க குமா­ர­துங்க பிர­பா­க­ரனை ”மிஸ்டர் பிர­பா­கரன்” என்று கூறி­யுள்ளார். இதன்­மூலம் உலகின் மிலேச்ச பயங்­க­ர­வாத தலை­வனை கௌர­வித்­துள்ளார். பிர­பா­கரன் தனது இனத்­தையே அழித்­தவர். மைத்­தி­ரி­பால சிறி­சேன ஜனா­தி­ப­தி­யாக வந்தால் சந்­தி­ரிகா குமா­ர­துங்க பிர­தமர் பத­வியை பெறு­வ­தற்கும் முயற்­சிகள் இடம்­பெ­று­வ­தாக தெரி­கின்­றது. இந்த நாட்டை சமஷ்டி முறைக்கு கொண்டு செல்ல முயற்­சித்­தவர் சந்­தி­ரி­காதான்.
2000 ஆம் ஆண்டு தீர்வுப் பொதி மூலம் அதனை கொண்­டு­வர முயற்­சித்தார். ஆனால் அதிஷ்­ட­வச­மாக அது நிறை­வே­ற­வில்லை. தற்­போது ஈழக் கனவை நன­வாக்க சந்­தி­ரிகா முயற்­சிக்­கின்றார் என தெரிவித்தார்.

Post a Comment

0 Comments