Ticker

6/recent/ticker-posts

ஆம் ஆத்மி கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியீடு

டெல்லியில் பெண்கள் பாதுகாப்புக்காக மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் 15 லட்சம் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும் என ஆம் ஆத்மி கட்சி தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் பிப்ரவரி 7-ல் நடைபெறுகிறது. ஆம் ஆத்மி கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. கட்சி ஒருங்கிணைப்பாளர் அர்விந்த் கேஜ்ரிவால் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.

டெல்லியில் ஆம் ஆத்மி சார்பில் அர்விந்த் கேஜ்ரிவால், பாஜக சார்பில் முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி கிரண் பேடி, காங்கிரஸ் சார்பில் அஜய் மாக்கன் ஆகியோர் முதல்வர் வேட்பாளர்களாக களம் இறக்கப்பட்டுள்ளனர்.
பாரதிய ஜனதா கட்சி தேர்தல் அறிக்கைக்குப் பதிலாக தொலைநோக்குத் திட்டத்தை அறிவிப்போம் என கூறியுள்ள நிலையில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்டுள்ளது.
தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள்:
*டெல்லியில் பெண்கள் பாதுகாப்புக்கு 15 லட்சம் கேமராக்கள் பொருத்தப்படும்
*கல்வி, சுற்றுலா, வர்த்தகம், பிற சேவை துறைகள் மேம்படுத்தப்படும்.
*வேலைவாய்ப்பு பெருக்கப்படும்.
*டெல்லியில் அரசு ஊழியர்கள் பணி ஓய்வு வயது வரம்பு 60 ஆக இருக்கும்.
*அரசு ஊழியர்களுக்கு வீட்டு வசதி, மருத்துவ காப்பீட்டு வசதி செய்து தரப்படும்.
*யமுனை நதியில் குப்பைகள், தொழிற்சாலை கழிவுகளை கொட்டுவதை நிறுத்திக் கொள்ளுமாறு வேண்டுகோள் வைக்கப்படுகிறது
*அனைத்து கிராமங்களிலும் பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள் அமைக்கப்படும்
*நில கையகப்படுத்துதலுக்கு ஒப்புக்கொள்ளுமாறு யாரும் கட்டாயப்படுத்தப்படமாட்டார்கள்
*விவசாயிகளுக்கு உரம் மற்றும் விதைகளுக்கான மானியம் வழங்கப்படும்
*தலைநகரில் வாட் வரி குறைக்கப்படும். இதன்மூலம் பணவீக்கம் கட்டுப்படுத்தப்படும்
*கல்வி முறையில் சீர்திருத்தம் மேற்கொள்ளப்படும். வேலைவாய்ப்பை உறுதி செய்யும் வகையில் கல்வி முறை அமையும்.

Post a Comment

0 Comments