Ticker

6/recent/ticker-posts

ஷிரந்தி ராஜபக்ஷவை விசாாிக்க நீதிமன்றம் உத்தரவு!

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிரந்தி ராஜபக்சவின் சிரிலிய சவிய வங்கி கணக்குகளை சோதனையிடுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பல நிதி மோசடிகள் தொடா்பாக மஹிந்த ராஜபக்ஷவின் குடும்பத்தினா் பலா் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுவரும் வேளையில் நீதிமன்றத்தினால் பொலிஸ் நிதி குற்றத்தடுப்பு பிரிவிற்கு இவ் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு வங்கிக் கணக்குகளின் ஊடாக குறித்த கணக்கு இலக்கத்திற்கு பணம் வைப்பிலிடப்பட்டுள்ளதாகவும், காசோலைகளை பயன்படுத்தி பல்வேறு வங்கி கிளைகளில் பணம் மாற்றப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதற்கான விசாரணைகளை ஆரம்பிப்பதற்கு அனுமதி வழங்குமாறு பொலிஸாரினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கமைய இவ் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments