ஞானசார தேரர் முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புப் பிரசாரத்தை முன்னெடுத்து இஸ்லாத்தை இழிவுபடுத்துகின்றமைக்கு எதிராக நேற்று பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானினால் குறித்த முறைப்பாடு கையளிக்கப்பட்டுள்ளது.
இதன்போது கருத்து தெரிவித்த கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான்,
மீண்டும் இந்நாட்டில் இனவாதத்தை தூண்ட ஒருசில சக்திகள் முயற்சி செய்கின்றன. முக்கியமாக ஞானசார தேரர் இந்நாட்டை பிரிக்கும்
செயற்பாடுகளிலும் 2005 ஆம் ஆண்டுக்கு முன்னர் இருந்ததை போன்று மக்களிடத்தில் இனவாதத்தை பரப்பும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றார்.
ஒரு சமய தலைவர் எவ்விதமான பொறுப்புணர்வுமின்றி இந்நாட்டு மக்களின் மனங்களில் கொடூர எண்ணங்களை விதைக்கும் வகையில் கருத்துக்களை வெளியிடுவது மிகவும் வேதனையான விடயமாகும். தற்போது மீண்டும் அவரது இனவாதக் கருத்துக்களை கொண்டும் சமய பிரிவினைவாதத்தை கொண்டும் இந்நாட்டு மக்களை பழிவாங்க முனைகின்றார். இதற்கெதிராகவே பொலிஸ் நிலையத்தில் இன்று முறையிட வந்தோம்.
அனைத்து மக்களையும் பாதுகாப்பதாகவும் அனைத்து மதத்துக்கும் சம அந்தஸது வழங்குவதாகவும் உறுதியளித்தே நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. இவ்வாறிருக்கையில் தற்போது மீண்டும் பிரிவினைவாதத்தை ஆரம்பித்திருக்கும் ஞானசார தேரரின் செயற்பாடுகளை கண்டிக்க வேண்டும், சமயத்தை கொண்டு ஏனையோரை தண்டிக்கும் செயற்பாட்டை அவர் உடனடியாக நிறுத்த வேண்டும் என பொலிஸ்மா அதிபரிடம் கோரிக்கை விடுக்கின்றோம்.
அவ்வாறு பொலிஸ்மா அதிபர் நீதியை நிலைநாட்டாவிட்டால் தொடர்ந்து கடுமையான எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவோம் என்பதை தெரிவித்துக்கொள்கின்றோம்.
வெல்லம்பிட்டிய கொஹிலவத்தை பள்ளிவாசல்களிலும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஞானசார தேரர் பொலநறுவையில் கூறியதைப்போன்று கொடிகாவத்தை சம்பவத்துக்கும் அவருக்கும் சம்பவம் உள்ளது என்றே தோன்றுகின்றது.
மீண்டும் இனவாதத்தை தூண்டி சமய பிரசாரங்களை கொடூரமான வகையில் மக்களிடத்தில் கொண்டு செல்லும் போக்கினை உடன் நிறுத்திக்கொள்ள வேண்டும். அவ்வாறில்லாவிட்டால் இனிவரும் எதிர்ப்பு செயற்பாடுகள் மிகவும் மோசமானதாக இருக்கும் என்றார்.
இந்த முறைப்பாட்டை கையளிக்கும்போது முஸ்லிம் உரிமைகளுக்கான அமைப்பின் முக்கியஸ்தர் அஸீஸ் நிஸாருதீன் மற்றும் ஆர்.ஆர்.ரீ. அமைப்பின் தலைவர் சிரேஸ்ட சட்டத்தரணி சிராஸ் நூர்தீன் உள்ளிட்டோரும் உடனிருந்தமை குறிப்பிடத்தக்கது. நன்றி : விடிவெள்ளி
செயற்பாடுகளிலும் 2005 ஆம் ஆண்டுக்கு முன்னர் இருந்ததை போன்று மக்களிடத்தில் இனவாதத்தை பரப்பும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றார்.
ஒரு சமய தலைவர் எவ்விதமான பொறுப்புணர்வுமின்றி இந்நாட்டு மக்களின் மனங்களில் கொடூர எண்ணங்களை விதைக்கும் வகையில் கருத்துக்களை வெளியிடுவது மிகவும் வேதனையான விடயமாகும். தற்போது மீண்டும் அவரது இனவாதக் கருத்துக்களை கொண்டும் சமய பிரிவினைவாதத்தை கொண்டும் இந்நாட்டு மக்களை பழிவாங்க முனைகின்றார். இதற்கெதிராகவே பொலிஸ் நிலையத்தில் இன்று முறையிட வந்தோம்.
அனைத்து மக்களையும் பாதுகாப்பதாகவும் அனைத்து மதத்துக்கும் சம அந்தஸது வழங்குவதாகவும் உறுதியளித்தே நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. இவ்வாறிருக்கையில் தற்போது மீண்டும் பிரிவினைவாதத்தை ஆரம்பித்திருக்கும் ஞானசார தேரரின் செயற்பாடுகளை கண்டிக்க வேண்டும், சமயத்தை கொண்டு ஏனையோரை தண்டிக்கும் செயற்பாட்டை அவர் உடனடியாக நிறுத்த வேண்டும் என பொலிஸ்மா அதிபரிடம் கோரிக்கை விடுக்கின்றோம்.
அவ்வாறு பொலிஸ்மா அதிபர் நீதியை நிலைநாட்டாவிட்டால் தொடர்ந்து கடுமையான எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவோம் என்பதை தெரிவித்துக்கொள்கின்றோம்.
வெல்லம்பிட்டிய கொஹிலவத்தை பள்ளிவாசல்களிலும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஞானசார தேரர் பொலநறுவையில் கூறியதைப்போன்று கொடிகாவத்தை சம்பவத்துக்கும் அவருக்கும் சம்பவம் உள்ளது என்றே தோன்றுகின்றது.
மீண்டும் இனவாதத்தை தூண்டி சமய பிரசாரங்களை கொடூரமான வகையில் மக்களிடத்தில் கொண்டு செல்லும் போக்கினை உடன் நிறுத்திக்கொள்ள வேண்டும். அவ்வாறில்லாவிட்டால் இனிவரும் எதிர்ப்பு செயற்பாடுகள் மிகவும் மோசமானதாக இருக்கும் என்றார்.
இந்த முறைப்பாட்டை கையளிக்கும்போது முஸ்லிம் உரிமைகளுக்கான அமைப்பின் முக்கியஸ்தர் அஸீஸ் நிஸாருதீன் மற்றும் ஆர்.ஆர்.ரீ. அமைப்பின் தலைவர் சிரேஸ்ட சட்டத்தரணி சிராஸ் நூர்தீன் உள்ளிட்டோரும் உடனிருந்தமை குறிப்பிடத்தக்கது. நன்றி : விடிவெள்ளி
0 Comments