ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியும் இணைந்து புதிய கூட்டணி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
புதிய கூட்டணியின் தலைமைத்தும் மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்க முடிவு எடக்கப்பட்டுள்ளதாக அறியவருகிறது. நேற்றிரவு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று இரவு 7 மணியளவில் இந்த கூட்டம் இடம்பெற்றது.
தாமரை மொட்டுடன் இணைந்து புதிய முன்னணி ஒன்றை உருவாக்குவதற்கும் மஹிந்த ராஜபக்சவை அதன் தலைவராக நியமித்து புதிய பயணம் ஒன்றை மேற்கொள்ளவும் தாம் முடிவெடுத்துள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரகட்சியின் பொது செயலாளர் பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன் பியதாஸ கூறியுள்ளார்.
0 Comments