அவசரகால சட்டம் நீக்கப்பட்டதால் தீவிரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடைய சோதனைகள், கைதுகள், தடுத்து வைத்தல்கள் போன்ற நடவடிக்கைகளுக்கு எவ்வித பாதிப்பும் வராது என பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஏப்ரல் 21ம் திகதி இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலைத் தொடர்ந்து அவசரகால சட்டம் அமுல்படுத்தப்பட்டது.
நாட்டில் அவசரகால சட்டம் மேலும் நீடிக்கப்பட மாட்டாது என பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் சாந்த கோட்டேகொட நேற்று (23) அறிவித்திருந்தார்.
0 Comments