Ticker

6/recent/ticker-posts

கோத்தாவின் அரசாங்கத்தில் மைத்திரிக்கு பிரதமா் பதவி?

ஜனாதிபதி தோ்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்று கோத்தாபய ராஜபக்ஷ பதவியேற்ற பின்னர் பாராளுமன்ற பொதுத் தேர்தல் இடம்பெறும் வரை  இடைக்கால அரசாங்கத்தின் பிரதமராக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனாவை நியமிக்க முடியும் என்று எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதிக்கு சிறிசேனவுக்கு தெரிவித்துள்ளதாக அறிய வருகிறது.

நேற்றிரவு எதிர்க்கட்சித் தலைவருக்கும், ஜனாதிபதிக்கும் இடையிலான மிக ரகசியமான சந்திப்பின் போது மஹிந்த ராஜபக்ஷ இந்த முன்மொழிவை முன்வைத்துள்ளாா்.

மேலும் பொதுத் தேர்தலுக்குப் பின்னர் அமைக்கப்படும் அரசாங்கத்தில்  தேவைப்படும்  அமைச்சு பதவிகளுக்கான முன்மொழிவை சமர்ப்பிக்குமாறும்  எந்தவொரு ஆட்சேபனையும் இன்றி சிறிசேனவின் முடிவுக்கு  தாம் உடன்படுவதாகவும்  மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

எதிா்வரும் தினங்களில் கோத்தாபய ராஜபக்ஷவுடன்  கலந்துரையாடி இது தொடர்பாக இறுதி முடிவை எட்டமுடியும் என்றும் மஹிந்த ராஜபக்ஷ தொிவித்துள்ளாா்.

Post a Comment

0 Comments