Ticker

6/recent/ticker-posts

சாய்ந்தமருது தாக்குதல் தொடர்பான ஆதாரங்களை மறைத்தாக பொலிஸ் அதிகாரி ஒருவர் கைது !


2019 ஏப்ரல் 26 ஆம் தேதி கல்முனையில் உள்ள சாய்ந்தமருது பகுதியில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு தொடர்பான ஆதாரங்களை மறைத்த குற்றத்திற்காக    பொலிஸ் அதிகாரி ஒருவரை  இன்று (13) கொழும்பு  குற்றப்பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சந்தேக நபர் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார், மேலும் விசாரணைகள் கொழும்பு குற்றப்பிரிவு மூலம் மேற்கொள்ளப்படுகின்றன.

குண்டுவெடிப்பு இடம்பெற்ற நேரத்தில் இவர்  களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையத்தின்  போக்குவரத்து பிரிவுக்கு பொறுப்பாளராக இருந்துள்ளார்.

Post a Comment

0 Comments