அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் ஜோன் கெர்ரி எதிர்வரும் மே மாதம் இரண்டாம் திகதி இலங்கை வரவுள்ளார்.
இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக அவர் இலங்கை வரவுள்ளதாக கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கை வரும் அவர், ஜனாதிபதி மற்றும் பிரதமர் உட்பட உயர்மட்ட தலைவர்களுடன் கலந்துரையாடவுள்ளார்.
அத்துடன் சர்வகட்சித் தலைவர்களையும், பொது அமைப்பு பிரமுகர்களையும் சந்திக்கவிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது, ஜோன் கெர்ரியின் இலங்கைக்கான முதலாவது விஜயம் என்பதுடன், அமெரிக்க ராஜாங்க செயலாளர் ஒருவர் 11 வருடங்களுக்கு பின்னர் இலங்கைக்கு வருவதும் குறிப்பிடத்தக்கது.
இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக அவர் இலங்கை வரவுள்ளதாக கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கை வரும் அவர், ஜனாதிபதி மற்றும் பிரதமர் உட்பட உயர்மட்ட தலைவர்களுடன் கலந்துரையாடவுள்ளார்.
அத்துடன் சர்வகட்சித் தலைவர்களையும், பொது அமைப்பு பிரமுகர்களையும் சந்திக்கவிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது, ஜோன் கெர்ரியின் இலங்கைக்கான முதலாவது விஜயம் என்பதுடன், அமெரிக்க ராஜாங்க செயலாளர் ஒருவர் 11 வருடங்களுக்கு பின்னர் இலங்கைக்கு வருவதும் குறிப்பிடத்தக்கது.

0 Comments