புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை விசாரணைகளை நீதியாக முன்னெடுப்பதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆதரவு ஆயுதக்குழுக்கள் இடையூறு விளைவிக்கின்றன என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுத்துரைத்துள்ளது.
யாழ்ப்பாணம் தீவகத்தினை முன்னர் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்த அரசியல் சக்திகள். மஹிந்த ஆதரவு நிலைப்பாட்டில் இருக்கின்றன. அவர்கள், வித்தியாவின் படுகொலையை அரசியல் சூழ்ச்சித் திட்டங்களை அரங்கேற்றுவதற்காக பயன்படுத்துகின்றனர். எனவே, அந்தத் திட்டங்களை முறியடித்து நீதியான விசாரணைக்கான பணிப்பினை வழங்க வேண்டும் என்றும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரியுள்ளது.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் நேற்று சனிக்கிழமை பாராளுமன்றக் கட்டிடத் தொகுதியில் சந்தித்துப் பேசினர். இதன்போதே, மேற்கண்ட விடயங்களை வலியுறுத்தியுள்ளனர்.

0 Comments