Ticker

6/recent/ticker-posts

இன்றைய அரசியல் நெருக்கடி நிலைக்கு மஹிந்தவும் பொறுப்பாளியாவார் – குமார வெல்கம

இன்றைய அரசியல் நெருக்கடிகளுக்கு முழு பொறுப்பினையும் ஜனாதிபதி  சிறிசேனவே ஏற்க வேண்டும். இதற்கு மஹிந்த ராஜபக்ஷவும் பங்குதாரராக காணப்படுகின்றார் என பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார். 

கடந்த சில தினங்களாக பாராளுமன்ற அமர்வை  மைத்திரி மற்றும் மஹிந்த தரப்பு புறக்கணித்து வருகிறது.   ஈது தொடா்பாக  கருத்துத் தெரிவிக்கும் போதே குமார வெல்கம  இவ்வாறு தெரிவித்தார். 

ஐக்கிய தேசிய முன்னணியினா்  தங்களின் பெரும்பான்மை பலத்தினை பலமுறை பாராளுமன்றத்தில் நிரூபித்து காட்டி  விட்டனர். ஆனால் ஜனாதிபதி சில விடயங்களை முறையாக நிறைவேற்றுங்கள் என்று குறிப்பிட்டு நிறைவேற்றப்பட்ட பிரேரணைகளை நிராகரித்து விட்டார். பெரும்பான்மை பலம் உள்ளவர்களிடம் ஆட்சியினை ஒப்படைத்து விட்டு எதிர்க்கட்சியாக செயற்பட்டால் மத்திரமே தற்போதைய அரசியல் நெருக்கடிக்கு தீா்வு வரும் என்றும் அவா் கூறினார்.

Post a Comment

0 Comments